எல்லோரையும் போலவே
என்னால் நினைக்க முடியாது
...நீ என் மனைவி!
நதியின் இலக்கு
கடல் அல்ல
...ஓடுவது!
பொழுது மடிவதுமில்லை
இரவு விடிவதுமில்லை
என்னருகில் நீ இருந்தால்!
நீரோடைக்கு மட்டும்
சொந்தமல்ல
...மனவோடைக்கும்!
கனவுகளோடு வாழ்வது
ஒரு கனவா?
தனியாக இருந்தால்
யாருடனும் பேசலாம்
...
தனிமையாக இருந்தால்...?
உறவுகளை தாண்டிய உரிமைகள்
வரமா...சாபமா?
...
...
உறவை பொறுத்தது!
சில நேரங்களில்
வேலியே வினையானால்
விதைகள் எங்கே போவது!