Wednesday, September 17, 2014

நினைவு

எல்லோரையும் போலவே
என்னால் நினைக்க முடியாது
...நீ என் மனைவி!

Tuesday, September 16, 2014

இலக்கு

நதியின் இலக்கு
கடல் அல்ல
...ஓடுவது!

அருகாமை

பொழுது மடிவதுமில்லை
இரவு விடிவதுமில்லை
என்னருகில் நீ இருந்தால்!

Monday, September 15, 2014

வடிகால்

நீரோடைக்கு மட்டும்
சொந்தமல்ல
...மனவோடைக்கும்!

கனவு

கனவுகளோடு வாழ்வது
ஒரு கனவா?

வித்தியாசம்

தனியாக இருந்தால் 
யாருடனும் பேசலாம்
...
தனிமையாக இருந்தால்...?

வரம்

உறவுகளை தாண்டிய உரிமைகள்
வரமா...சாபமா?
...
...
உறவை பொறுத்தது!

ஆக்கிரமிப்பு

சில நேரங்களில் 
வேலியே வினையானால்
விதைகள் எங்கே போவது!