Tuesday, August 26, 2014

அக்கா!

பெயரும் உறவுமாய் இல்லாமல்
பெயரே உறவாக இருந்தவள்
எப்படி வாழலாம் என்று
யோசிக்காமல்
எப்படி வளர்க்கலாம் என்று
யோசித்தே...
வாஞ்சை என்று அழுத்தி 
சொல்லவேண்டாம்..
அக்கா என்று அழகாக
சொல்லலாம்
நிலாச்சோறு...நினைவில் 
கொஞ்ச தூரம் 
அக்கா சோறு...போதும்
என்று சொல்வதற்குள்
சோறு தீர்ந்து விடும்
மூன்று தலைமுறையை 
வளர்த்து வழிகாட்டியவள்
நான்காவது தலைமுறையை
வரவேற்று பனிவிடை செய்தவள்
ஓயாத உடம்பு...
சற்று ஓய்வு எடு..என்று
சொன்னது புரியாமல்...
யாரிடமும் சொல்லாமல் 
...ஓய்வெடுக்க சென்றுவிட்டால்
...அக்கா..அக்கா..அக்கா...